Blog
Enquire Now
Uncategorized

IVF/IUI-கான கருப்பை தூண்டுதலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

IVF/IUI-கான கருப்பை தூண்டுதலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Author: Dr.Hema Vaithianathan ,Senior Consultant & Fertility Specialist

உலகளவில் 6 பேருக்கு ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறார்கள்.

மலட்டுத்தன்மை, ஆண் பெண் இரு பாலரின் மனரீதியான மற்றும் உடல்ரீதியான நலனில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (ART) என்னும் திறம்பட திட்டமிடப்பட்ட காம்ப்ளக்ஸ் செயல்முறைகள், கருவுறுதல் பிரச்சனைகளோடு போராடும் தம்பதிகளுக்கு நிம்மதி பெருமூச்சை அளிக்கிறது.

சிகிச்சையில் தம்பதியர் செலவிடும் நேரத்தை எளிதாக்கவும், சிகிச்சையை அவர்கள் எளிமையாய் திட்டமிடவும் கையாளவும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆதார-அடிப்படையிலான ஆய்வைக் கொண்டு, இந்த செயல்முறைகள் மாற்றியமைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாடுகள், தற்போதைய உதவி இனப்பெருக்க சிகிச்சையை ‘நோயாளியின் வசதிக்கேற்ப’ மாற்றி அதை மிகவும் வெற்றிகரமாக்கியிருக்கிறது.

IVF மற்றும் IUI போன்ற செயல்முறைகளில், உயர் தர கேமட்டுகளை பிரித்தெடுப்பதில் தான் அச்செயல்முறையின் வெற்றி இருக்கிறது.

ஆரம்ப நாட்களில், இயற்கையான மாதவிடாய் சுழற்சி அமைப்பில் உதவி இனப்பெருக்க செயல்முறைகள் நடத்தப்பட்டன. இயற்கையான அண்டவிடுப்பின் கட்டத்தில் கருமுட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர், கருப்பை தூண்டுதலுக்கான புதிய மருந்துகளின் வருகையால், ART நடைமுறைக்குள் கருப்பை தூண்டுதலின் மேம்படுத்தப்பட்ட செயற்படி ஒருங்கிணைக்கப்பட்டது.

கருப்பை தூண்டுதல்:

சில மருந்துகளைப் (ஹார்மோன் வழித்தோன்றல்கள்) பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளை உருவாக்க கருப்பைகள் தூண்டப்படுகின்றன.

இந்த செயல்முறையின் மூலம், கருத்தரிப்பின் வாய்ப்புகளை அதிகரிக்க, கருப்பை பரிமாற்றத்துக்காக போதுமான மற்றும் பல நல்ல தரமான எம்ப்ரியோக்களைப் பெற முடியும்.

கூடுதலாக, குறைவான கருப்பை இருப்பு உடையவர்களுக்கும், தங்கள் கருவுறுதலைப் பாதுகாக்க விரும்புகிறவர்களுக்கும் இது உதவுகிறது.

இது எப்படி செயல்படுகிறது?

கருமுட்டைகளைப் பெறுவதற்காக, நுண்ணறைகளை தூண்டும் ஹார்மோன் (FSH) மற்றும் லுடினைசிங் ஹார்மோன் (LH) என்னும் ஹார்மோன் ஊசிகள் மூலம், 8-14 நாட்களுக்கு பல கருமுட்டைகளை உருவாக்க கருப்பைகள் தூண்டப்படும்.

இந்த ஹார்மோன்கள் உடலில் இயற்கையாகவே உருவாகினாலும், கருப்பையில் பல கருமுட்டைகள் முதிர்ச்சியடைவதற்காக, ஊசிகள் மூலம் இவை அதிகளவில் சுரக்க வைக்கப்படும்.

நுண்ணறைகளின் முதிர்ச்சி காலத்தைப் பொருத்து தூண்டுதலுக்கான காலம் இருக்கும்.

சில நேரங்களில், கருப்பை நுண்ணறைகளை முதன்மைப்படுத்தி தயார்படுத்த, கருப்பை தூண்டுதலை ஆரம்பிப்பதற்கு முன் ஹார்மோன் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

சிகிச்சை தொடங்கியதும் என்ன எதிர்பார்க்கலாம்?

1.தினமும் ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்படும்.

2.உடலில் ஹார்மோன் அளவுகளை கண்காணிக்க தொடர்ச்சியான இரத்த பரிசோதனைகள் எடுக்கப்படும்.

3.கருப்பைகளில் நுண்ணறைகளின் வளர்ச்சியை ஆய்வு செய்ய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் எடுக்கப்படும்.

4.மருந்துகள் மற்றும் ஹார்மோன் ஊசிகளால், மனநிலை அலைபாய்வது போன்ற சில பாதிப்புகள் ஏற்படலாம்.

5.எதிர்பார்த்த விதத்தில் கருப்பைகள் சிகிச்சைக்கு பதிலளிக்காவிட்டால் சுழற்சி ரத்துசெய்யப்படலாம்.

ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்:

1.மார்பகம் மென்மையாகுதல்

2.ஊசி போடும் இடத்தில் வீக்கம் அல்லது தடிப்பு

3.இயற்கையாய் கருத்தரித்திருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கருவுற்ற எம்ப்ரியோக்கள் உருவாகும்

4.கருப்பை மிகை தூண்டுதல் நோய்க்குறி

5.மனநிலை அலைபாய்தல் மற்றும் எரிச்சல்

கருப்பை மிகை தூண்டுதல் நோய்க்குறி (OHSS)

பெயரின்படியே, அதிகளவு ஹார்மோன்களினால் கருப்பைகள் அதிகப்படியாக தூண்டப்படுவதால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. இதினால், கருப்பை வீக்கமும் உடலில் நீர் கசிவும் ஏற்படும்.

IVF சிகிச்சை மேற்கொள்ளும் PCOS உடைய பெண்களுக்கு இது மிகப் பொதுவாய் ஏற்படும்.

நிலைமையின் தீவிரத்தையும் அறிகுறிகளையும் பொருத்து சிகிச்சை வழங்கப்படும்

OHSS-ன் அதிகப்படியான ஆபத்தில் இருக்கும் பெண்கள் CAPA – IVMஐ தேர்ந்தெடுக்கலாம்.

CAPA – IVM, ஒரு மருந்தில்லா IVF சிகிச்சை

இன் விட்ரோ மெச்சூரேஷனின் (IVM) மேம்படுத்தப்பட்ட சிகிச்சை இது. வழக்கமான இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷனை (IVF) விட இதில் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. இதில் பல ஊசிகளும் வேதனையான பக்க விளைவுகளும் தவிர்க்கப்படுகின்றன. குறைந்த செலவுடைய, குறைந்த தீவிரமுடைய இந்த செயல்முறை, PCOS உடைய பெண்களுக்கும், கருப்பை மிகை தூண்டுதல் நோய்க்குறியின் (OHSS) அதிகப்படியான ஆபத்தை உடைய நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த செயல்முறைக்கு கருப்பை தூண்டுதல் தேவையில்லை அல்லது சிறிதளவு போதும்.

கருப்பை தூண்டுதலை நீங்கள் கருதினால் இவற்றை நினைவில் கொள்ளவும்:

1.உங்கள் மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களை எப்போதும் கண்காணிக்கவும்

2.ஏதேனும் கவனிக்கப்படவேண்டிய அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்

3..இந்த செயல்முறை சிலநேரம் தாங்கமுடியாமலோ அழுத்தம்கொடுப்பதாகவோ இருக்கலாம். நிதானமாய் இருங்கள்.

Write a Comment